இதுவரை நீயாரோ,
இதுவரை நான்யாரோ,
எதுவரை செல்வோம் என்று
யார்தான் சொல்வாரோ?
அறிமுகம் செய்தோமே,
அறிந்திட முனைந்தோமே,
மறைந்திடும் காலம் வரையில்,
மாறாதிருப்போமே...
ஒருகணம் முறைத்தோமே,
மறுகணம் சிரித்தோமே,
இயற்கையின் விதி இதுவென்று,
நடப்பில் கலந்தோமே!
உறவென வளர்ந்தோமே,
உயிரிலே கலந்தோமே,
துன்பமும் நட்பினைத் தொடர்ந்தால்,
தோளில் அணைப்போமே!
யுகங்களாய் தொடர்வோமே,
புதுவிதி செய்வோமே,
நட்பிலே காதல் என்ற,
களையை எடுப்போமே!