'ஆ' வன்னா முதல்
'ஃ' ன்னா வரை
கரம்பிடித்து கற்பித்தாய்!
சிறுவிரல் பிடித்து,
குறுமணல் மிதிக்க,
தத்தி தவழ்ந்தவனை,
தலைநிமிர நடக்கவைத்தாய்!!
இருள் தெரியாதவாறு,
இமைகளை இறுகக்கட்டி,
அதிகம் அலையவிடாமல் அகப்பட்டு,
கண்ணாமூச்சி ஆடினாய்!!!
மூவாறு வருடமாய் தெரிந்த,
முதல் தோழியை,
மாமன் மணமுடிக்கையில்
கண்ணில் நீர்கசிய தெரிந்தது,
முதன்முதலாய்
தம்பிக்கு தமக்கையல்ல,
அன்னையென்று,
ஆனந்தமாய்!!!