செவ்வாய், 5 அக்டோபர், 2010

எப்படி சொல்வேன்...?

இளையோர் முதியோரென
இனம் பாராமல் இளைப்பாரவிட்டு,
வழிமாறி வானுலா வந்த
பறவைகளின் பசி தீர்த்து,

மண் வளமுற மனமார,
மாறியை பொழியச்செய்து,
இயற்கையின் இன்னலில் பொருளிழந்து,
அறைகூவளிட்டோரை அரவனைத்ததை,

ஓரறிவுள்ள நான் எப்படி சொல்வேன்,
வெறும் சாலையோர மரமென்று எனை,
வேறு வேறாய் வேரறுக்கும்,
ஆறறிவுள்ள மானிடர்களிடம்...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக