சனி, 22 பிப்ரவரி, 2014

தூக்குமேடை!

கழுத்தை, முத்தமிட 
காத்திருந்த கயிற்றுக்கு 
அவனிரு கைகளும் 
கால்களும் இமைகளும் 
இதழ்களும் ஒருசேர 
நடனமாடி, உயிர்விட்டு 
விடைபெற்றது 
தூக்குமேடையில் இருந்து...

வீழ்வேனென்று நினைத்தாயோ?

விதையென, மழையென,
மண்ணில் புதைந்திட 
வீழ்ந்தால் வீழ்வோம்...
மரமென, நதியென,
மலைத்திடும் புயலென 
மறுமுறை, எழுவோம்...
எழுந்திடும் அலையென, 
இசைத்திடும் இடியென 
பலமுறை, வருவோம்...
எதிர்த்திடும் பகைதனை,
எமனிடம் இட்டு
செல்வோம் வெல்வோம்...