வெள்ளி, 18 டிசம்பர், 2009

என் செய்வேன் நான்...?

ஆதவன் கரங்களால்,
அல்லியை ஏந்தவா..?
மாதவன் குழல்களால்,
மந்திரம் பாடவா...?
சுந்தரன் நானென,
சூட்சமம் செய்யவா...?
மந்திர புன்னகையால்,
மனதினை திருடவா...?
கொற்றவன் கற்றவன்,
ஏற்றவன் நானே!!!
திண்ணமாய் வண்ணமாய்,
உனை வென்றிடுவேனே...!!!

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

புதிர்!!!

அன்றோ என்னுடன்,
நிகழ்வுகளாய்.
இன்றோ என்னுடன்,
நினைவுகளாய்.
நினைவில் மட்டும்,
வாழ்கிறாய் ஏனடி...?
நிஜமோ என்றும்,
கனவோ தானடி...?

பெண்!!!

விடைகள் அறியா,
கேள்விகள் பல,
அதில் பெண்களின்,
உள்ளமோ சில!!!