இன்று,
எழுதபடாத இலக்கியம்,
உன் வாழ்க்கை.
அதை போற்றப்படும்,
காவியமாய் மாற்று,
நாளை...
மரத்தில்,
கிளைகள் சில,
கனிகள் பல,
வேர் ஒன்று தான்...
உன் வேர்வையை,
வேரூன்ற செய்...
தீமைகள் சிலவாயினும்,
நன்மைகள் பற்பல...
கதிரவன் கரங்கள்,
நீரில் மூழ்கின,
தாமரை மொட்டோ,
வெட்கத்தில் வெளியேறி,
சிவந்தது.
பின்,
மெல்ல மலர்ந்தது...