ஆணும் இல்லை,
பெண்ணும் இல்லை,
அவர்தம் நெஞ்சில்
பேதம் இல்லை.
ஊரும் இல்லை,
பேரும் இல்லை,
உறவுகள் மட்டும்
உரிமை இல்லை,
தீதும் இல்லை,
கேடும் இல்லை,
இவரால் நாட்டில்
ஊழல் இல்லை.
தனிமை உண்டு,
துயரம் உண்டு,
இவரிடம் கற்க
துணிவும் உண்டு.
ஆனாய் பிறந்தவன்,
ஆதிக்கம் செய்கிறான்,
பெண்ணாய் பிறந்தவள்,
பேதைமை பார்க்கிறாள்,
மக்களை மாற்ற
மண்ணில் பிறந்த
அர்த்தனார் ஈசனே!!!