ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

திருவாளர் திருமதி!!!


ஆணும் இல்லை,
பெண்ணும் இல்லை,
அவர்தம் நெஞ்சில்
பேதம் இல்லை.

ஊரும் இல்லை,
பேரும் இல்லை,
உறவுகள் மட்டும்
உரிமை இல்லை,

தீதும் இல்லை,
கேடும் இல்லை,
இவரால் நாட்டில்
ஊழல் இல்லை.

தனிமை உண்டு,
துயரம் உண்டு,
இவரிடம் கற்க
துணிவும் உண்டு.

ஆனாய் பிறந்தவன்,
ஆதிக்கம் செய்கிறான்,
பெண்ணாய் பிறந்தவள்,
பேதைமை பார்க்கிறாள்,

மக்களை மாற்ற
மண்ணில் பிறந்த
அர்த்தனார் ஈசனே!!!

வியாழன், 3 பிப்ரவரி, 2011

ஆசான்!!!


அந்தியில் மறையும் ஆதவன்,
வீட்டில் விளக்கேற்ற.
அன்றியும் மறையா இறைவன் நீ,
வாழ்வில் ஒளியேற்ற.
நாயகனாய்
நகர்புரமெங்கும்
ஊர்வலம்
செல்ல வழிவகுத்த
சாரதியே...
ஈசனும் நீயே,
ஏனைய இறைவனும்,
நீயே!!!
எழுதும் எழுத்தெல்லாம்,
சமர்பிக்கிறேன்,
என் எழுத்தரிவித்தவனே!!!

கண்ணாடி!!!


அசைவுகளை அற்புதமாய்,
படம் பிடித்து,
நிகழ்வுகளை நிசப்தமாய்,
வெளிக் காட்டி,
என்னை என்முன்னே
நிறுத்தினாய்...
காலையில் மாலையில்
எனை பார்க்க
உனை பார்த்தேன் !!!
என்னிடம் நான் பேச,
உனை நாடி வந்தேன்!!!
காலத்தின் அற்புதமே!!!
உடைக்காமல் உள்செல்லும்
ஒளிப்பிம்பம்,
நீ உடைந்தாலும்,
உடையாமல் உரையாடும்
என் பிம்பம்!!!