செவ்வாய், 19 ஏப்ரல், 2011

நட்பு!!!

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து,
எதிரெதிரே நிற்கிறோம்,
நட்பின் முகவரி கொண்டு.

சிரிக்க வைத்தாய்,
சிந்திக்க வைத்தாய்,
பின் மனச்சிறையில் மெல்ல
அடைத்து வைத்தாய்.

நாட்கள் நகர்ந்திடும்,
நினைவுகள் மறந்திடும்,
என்றாவது ஒருநாள்,
எங்கோ ஒர்குரல்,
பெயர் சொல்லி அழைக்க,
இன்றே நினைக்கிறன்,
அந்நாள் ஒரு பொன்னாள்!!!

மாற்றம் காண்பதே,
உறவின் அடையாளம்,
மாறாதிருப்பதே நட்பின்,
வெகுமானம்!!!

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

இடைவெளி!!!


பாதையோ நெடுந்தூரம்,
பயணமோ தடுமாறும்,
பார்ப்பவர் சிலநேரம்,
காட்சிகள் நிலைமாறும்.

மனதிலே ஒருராகம்,
மயக்கமே உருவாகும்,
மாற்றமே நிலையாகும்,
இலக்குகள் தொலைவாகும்.

நினைப்பவை நடந்தேற,
தடைகளும் தடுமாற,
உடைத்திடு இடைவெளி,
உருவாகும் நல்வழி!!!

கேள்வியும், பதிலும்

உனக்காக நான்
எழுதும் எழுத்தெல்லாம்
என்னிடம் கேட்கும்,
எதற்காகவென்று?

விடைதராது உன்போல்
மௌனமாய் இருந்தேன்
நானும், எனைபார்த்து
கேட்ட கேள்விகளுக்கு!!!