எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து,
எதிரெதிரே நிற்கிறோம்,
நட்பின் முகவரி கொண்டு.
சிரிக்க வைத்தாய்,
சிந்திக்க வைத்தாய்,
பின் மனச்சிறையில் மெல்ல
அடைத்து வைத்தாய்.
நாட்கள் நகர்ந்திடும்,
நினைவுகள் மறந்திடும்,
என்றாவது ஒருநாள்,
எங்கோ ஒர்குரல்,
பெயர் சொல்லி அழைக்க,
இன்றே நினைக்கிறன்,
அந்நாள் ஒரு பொன்னாள்!!!
மாற்றம் காண்பதே,
உறவின் அடையாளம்,
மாறாதிருப்பதே நட்பின்,
வெகுமானம்!!!