ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

இடைவெளி!!!


பாதையோ நெடுந்தூரம்,
பயணமோ தடுமாறும்,
பார்ப்பவர் சிலநேரம்,
காட்சிகள் நிலைமாறும்.

மனதிலே ஒருராகம்,
மயக்கமே உருவாகும்,
மாற்றமே நிலையாகும்,
இலக்குகள் தொலைவாகும்.

நினைப்பவை நடந்தேற,
தடைகளும் தடுமாற,
உடைத்திடு இடைவெளி,
உருவாகும் நல்வழி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக