செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

முரண்


வறண்ட மனதிற்கு
பசுமைதர வெளியே 
வந்தாய்...
உன்பாதச்சுவடுகள் பார்த்து
மேகங்கள் தடுமாறி 
முட்டிக்கொண்டது,
வறண்ட பூமியில் 
சற்றே உன் 
பாதங்களை பதியவை,
அவையும் உயிர்பெறட்டும்,
உன்பெயர் சொல்லி...

கைதி

உன் பெயரை
வாசிப்பதே
குற்றமோ...?
சிந்திக்க முடியா,
கற்பனை கைதி
ஆகிவிட்டேன்.
மன்னிப்பாயா...?

மௌனம்

கடல்அலை வந்து,
கரை கரைத்திடும்,
நேரம்...
எந்தன் மனஅலை,
உந்தன் பெயர்சொல்லிவிட்டு,
போகும்...
கைபேசியில்,
நீ பேசிட,
முன்னின்று,
நான் வந்தால்,
மௌனம்...???

காவிரி

காவிரியை 
கண்டது 
மனிதக்குரங்கு...
பல்லாயிரம் 
வருடம் கடந்து
மனிதனாய் 
நாகரிகம் கண்டது,
நீருக்கு 
சண்டையிடவோ...?
சிந்திப்போம்...