திங்கள், 24 மார்ச், 2014

தவிப்பு!!!

நீ யாரென யாரென தவிக்கிறேன்!
ஒரு வெற்று திரையினை ரசிக்கிறேன்!
கடல் வானம் நீளம் யாவிலும்,
புது காதல் வர்ணம் பார்க்கிறேன்...
அடி உன்னால் எந்தன் இரத்தம் 
எல்லாம் நீலம் நீலம்...
உன் பெயரை எழுதி படித்து 
பார்த்தேன் நாளும் நாளும்...
இது புதிதாய் வெய்த சாலையா?
நம் பயணம் காதல் ஜுவாலையா???
உன்னால் இந்த, மகரந்த மாற்றம்,
நெஞ்சில் இன்று ஏனோ ஏனோ???
உன்பார்வை தினம் தினம்,
என்னைகொல்லும் கூர்வாள் தானோ???

வியாழன், 20 மார்ச், 2014

பிறந்தநாள் வாழ்த்துகள்!

அகராதியில் இல்லை,
அந்தாதியில் இல்லை,
உனைவாழ்த்திட தமிழில்,
உகந்த சொல்லேதுமில்லை...
பிறகெப்படி நானுனக்கு,
வாழ்த்துரைப்பேன் 
என்அற்புத தமிழ்மகளே!!!

செவ்வாய், 18 மார்ச், 2014

அடையாளம்!!!

காலடிகள் தெரிகின்ற,
செங்காட்டின் பாதைகள்,
தேடலின் அடையாளம்...
கைரேகை அழித்திட்ட,
மண்வெட்டி கைப்பிடிகள்,
உழவனின் அடையாளம்...

கன்னத்தில் காய்ந்திட்ட,
கண்ணீரின் சுவடுகள்,
காதலின் அடையாளம் :( :( :(
விறகோடு எரிகின்ற,
சடலத்தின் சாம்பல்கள்,
மரணத்தின் அடையாளம் :( :( :(

உழைக்கின்ற கரமெல்லாம்,
ஏழ்மையில் இறந்திட்டால்,
நேர்மையின் அடையாளம்!!!
இல்லார்க்கு எப்போதும்,
ஈகின்ற செங்கரங்கள்,
கருணையின் அடையாளம்!!!

வீழ்கின்ற போதெல்லாம்,
வேர்பிடித்து எழுந்திட்டால்?
முயற்சியின் அடையாளம்...
எந்நாட்டில் வாழ்ந்தாளும்,
பண்பாட்டை காத்திடுவர்,
நன்மனிதர் அடையாளம்!!!

எக்குலத்தில் பிறப்போரும்,
எம்குலமென வாழ்பவர்கள்,
பெருமையின் அடையாளம்...
சொல்கின்ற பொருளெல்லாம்,
பிழையின்றி புரிந்திட்டால்,
நற்கவிதையின் அடையாளம்!!!