காலடிகள் தெரிகின்ற,
செங்காட்டின் பாதைகள்,
தேடலின் அடையாளம்...
கைரேகை அழித்திட்ட,
மண்வெட்டி கைப்பிடிகள்,
உழவனின் அடையாளம்...
கன்னத்தில் காய்ந்திட்ட,
கண்ணீரின் சுவடுகள்,
காதலின் அடையாளம் :( :( :(
விறகோடு எரிகின்ற,
சடலத்தின் சாம்பல்கள்,
மரணத்தின் அடையாளம் :( :( :(
உழைக்கின்ற கரமெல்லாம்,
ஏழ்மையில் இறந்திட்டால்,
நேர்மையின் அடையாளம்!!!
இல்லார்க்கு எப்போதும்,
ஈகின்ற செங்கரங்கள்,
கருணையின் அடையாளம்!!!
வீழ்கின்ற போதெல்லாம்,
வேர்பிடித்து எழுந்திட்டால்?
முயற்சியின் அடையாளம்...
எந்நாட்டில் வாழ்ந்தாளும்,
பண்பாட்டை காத்திடுவர்,
நன்மனிதர் அடையாளம்!!!
எக்குலத்தில் பிறப்போரும்,
எம்குலமென வாழ்பவர்கள்,
பெருமையின் அடையாளம்...
சொல்கின்ற பொருளெல்லாம்,
பிழையின்றி புரிந்திட்டால்,
நற்கவிதையின் அடையாளம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக