திங்கள், 13 மார்ச், 2017

அவள் கண்கள்..


மழையே மெல்ல எட்டி பாரு,
வானம் விட்டு மெதுவாய்...
அலையே கொஞ்சம் தொட்டு பாடு,
கரையில் கால்கள் சுகமாய்...
பனியே, விரல் தொட்டு பூக்கும்,
மலர்கள் எல்லாம் புதிதாய்...
சிறகே வந்து வட்டம் போடு,
பூமி மேலே அழகாய்...

இது புதிதாய் பூத்த நொடிகளா?
இரு இமைகள் அடைத்த மொழிகளா??
அடை மழையில் நனைந்த விழிகளா?
ஏதோ புரியவில்லை...

புது உணர்வுகள் புதிதாய் பூக்குதே...
இந்த அனலில் உடலும் சிலிர்க்குதே...
என் அணுக்கள் விடையை கேட்க சொல்கிறதே...
சொல்! சொல்! சொல்! நீயே சொல்!...

உன் ஒற்றை பார்வை தீயடி...
உயிர் மெல்லச்சாகும் நோயடி...
இந்த வலிகள் ஏனோ வாழச்சொல்கிறதே...
சொல்! சொல்! சொல்! நீயே சொல்!...

ஞாயிறு, 12 மார்ச், 2017

வெற்றிடம்...

வளையாத பேணா முட்கள்,
வரைந்திட்ட காணா சொற்கள்,
காகித வெற்றிடம்...

வியாழன், 9 மார்ச், 2017

ஆதவமகன்...

ஆதவன் அங்கம் அவனுடலணிய  
அவனியில் அவனும் அவதரித்தான்...
அன்னையும் அன்பினை அளிக்காது,
ஆற்றினில் அவனை அர்பணித்தாள்...
ஆற்றலை அடைந்திட அறவழியின்றி, 
ஆண்டவன் அடியை அடைந்திட்டான்...
ஆற்றல் ஆளுமை அவனிடமாக,
அவனியே அஞ்ச ஆர்பரித்தான்...
அன்னையும், அனைவரும் ஆறுதலின்றி,
ஆநிரை ஆண்டவன் அடிசேர்ந்தார்...
அதிசய ஆண்டவன் அவனெதிராக,
அங்கம் அறுத்து அன்பளித்தான்...
அக்கினி அழகன் அவனின்றி,
அத்தோழனும்  அன்றே அழிந்திட்டான்...
ஆதவமகன் அவன் அடையாளம்,
அகிலம் அவன்பின் அறிந்திட்டான்...