மேற்கே சூரியனே...
மீள்வாய் சந்திரனே...
சிறைகள் ஒவ்வொன்றும்
தவிடாய் தவிடாய்...
ஆள்வது அயலானே...
அடிமை தமிழினமே...
புதிதாய் உயிர்த்தெழுவாய்
எழுவாய்...
நீதிக்கு சாய்வதெல்லாம்...
நம் தலையல்லவா....
நீங்காமல் கேட்கின்றோம்,
அழு குரலல்லவா???
அயலாரின் ஆட்சிக்கு
வழிவிட்டோமே....
அற்பமாய் வாழ்ந்திங்கு,
கதறிட்டோமே...
தடைகள் எல்லாம்,
நம்முன்னே சிறுபுழுவாய்...
விலகும் விலகும்,
நிற்போமே அணிபடையாய்...
உரிமைகள் விலைபோக,
கேளிக்கை ஒருகேடா???
வளமெல்லாம் இழந்தபின்,
வாழ்வதற்கு ஒருநாடா???
வீணாக உறங்கிட்டால்,
மீளா பிழையாகும்...
வீதிக்கு நீவாடா,
விரைந்தே விதிசெய்வோம்...
இனமொன்றை காத்திடவே,
புறப்படு என்னோடு...
புலிஆளும் குகையில்,
நரி வாழ்வதாகாது...
எழுவாய், விரைவாய்,
துணிவாய், இன்றே...
தடுப்பார், நினைத்தால்,
தடுப்போம், கொன்றே....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக