என்ன அழகடா???
கடற்கரையில் முதன்முதலாய்,
அவள் கால்கள் நடக்கையில்....
மணல் உள்வாங்கி முதல் முத்தமிட்டது...
பூமாதேவியே சற்று கிறங்கிப்போனாள்...
கோபங்கண்ட பேரலையோ?
கால்களில் தழுவி மணலை விரட்டியது...
கடல் ராசாவாயிற்றே!!!
வாயுவும் தன் பங்கிற்கு, சூறைக்காற்றாய்,
கால்களை சுற்றி மணலை சுழற்றி போட்டான்...
வாயுவும் ஆண்மகனே!!!
வானமும் நெருப்பும் பாவம் செய்தவர்கள்...
தீண்டாமை குறை அன்று தீயிற்கு தெரிந்தது...
தலைமேல் நிற்கும் அகங்காரம் வானுக்கு புரிந்தது...
என்ன வியப்படா...???
பூமிக்கும், நீருக்கும், காற்றுக்கும்,
வந்த சோதனை????
இவர்கள் ஒற்றுமை,
ஒவ்வோர் காலடியில்
காணாமல் போயிற்றே!!!!
பஞ்சபூதமும் கொஞ்சதூண்டிடும்,
மனிதக்கால்களா இவை???
இல்லை இல்லை மரகதகால்கள்....
அவை மரகதகால்கள்...
உன்னடி காண...
வாடி ராசாத்தி...
- ஜெகதீசன் பிரபாகரன்