அந்திசாயும் நேரமொன்று,
அரிதாரம் பூசினின்று,
காய்ந்தவயிற்று கோலமென்று,
இரைதேடும் கிளிகளிங்கு...
பசித்த பருந்தொன்று,
பட்டென வந்துநின்று,
சொல்லும் விருந்தென்று,
களவாடும் பசிகொண்டு...
கூக்குரலிடுவோர் உளரோ???
குறைதீர்ப்போர் உளரோ???
சங்கமிலா கூட்டமொன்று,
சகதியில் கலந்த நன்னீராய்...
இனமொன்று வாழுதடா இந்நாட்டில்,
பெயர்கூட சொல்லுதடா பண்பாட்டில்,
"மொழி" முதலெழுத்தா???
அவள் தலையெழுத்தா???
நாவில் நீண்டொலித்தா???
சீதை சிதிலமடைந்து சேர்ந்தபின்,
உறைந்ததடா அவள் உதிரம்,
பெயர்சொல்லி அழைத்தபின்...
பெயர்சொல்லி அழைத்தபின்...
அரிதாரம் பூசினின்று,
காய்ந்தவயிற்று கோலமென்று,
இரைதேடும் கிளிகளிங்கு...
பசித்த பருந்தொன்று,
பட்டென வந்துநின்று,
சொல்லும் விருந்தென்று,
களவாடும் பசிகொண்டு...
கூக்குரலிடுவோர் உளரோ???
குறைதீர்ப்போர் உளரோ???
சங்கமிலா கூட்டமொன்று,
சகதியில் கலந்த நன்னீராய்...
இனமொன்று வாழுதடா இந்நாட்டில்,
பெயர்கூட சொல்லுதடா பண்பாட்டில்,
"மொழி" முதலெழுத்தா???
அவள் தலையெழுத்தா???
நாவில் நீண்டொலித்தா???
சீதை சிதிலமடைந்து சேர்ந்தபின்,
உறைந்ததடா அவள் உதிரம்,
பெயர்சொல்லி அழைத்தபின்...
பெயர்சொல்லி அழைத்தபின்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக