மூன்றாம்பிறை மேலுதட்டில்,
பயிர்களேனோ துளிர்க்கவில்லை...
முகக்காட்டில் தேடிப்பார்த்தும்,
விடைகளேனோ தெரியவில்லை...
பருவநீர் வார்க்கும்வரை,
காத்திருக்க வேண்டுமா???
கரடுகளில் உயிரூட்ட
உரம்போட்டால் தீருமா???
அணிகலனில்லா ஆண்களுக்கு,
இயற்கையின் ஆபரணமா???
காளைகளின் திமில்பிடிக்கும்
வீரத்தின் அடையாளமா??
காத்திருப்பேன் நான்...
காத்திருப்பேன் நான்...
விதையுடைத்து,
உயிர்தெழுந்துவா...
துளிர் மீசையோ???
கட்டை மீசையோ???
முறுக்கு மீசையோ???
நரைத்த மீசையோ???
பாரதியாக ஆசையெனக்கு...
மீசையிலாவது...!!!
அவன் மீசையிலாவது...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக