விழித் தேடும் விடியல்கள்...!!!
திங்கள், 30 நவம்பர், 2009
நாம்!!!
நீயாகவே,
நீ வாழ்கிறாய்.
நாமாகவே,
நான் வாழ்கிறேன்...
அறிவாயோ...?
அறிந்தும்,
அறியாமல் இருப்பாயோ...?
ஞாயிறு, 29 நவம்பர், 2009
பனித்துளி, புல்வெளி.
புழுதிக் காட்டில்
பனித்துளி நீ,
தலையில் தாங்கும்
புல்வெளி நான்,
சூரியன் சுடுமென
மறைந்துவிடாதே,
தனிமையில் என்னை
தவிக்கவிடாதே.
விடியலில்,
மறைந்தது பனித்துளி,
விடியலால்,
மறித்தது புல்வெளி...
வெள்ளி, 13 நவம்பர், 2009
One side love...
கனவே,
கண்ணை கிள்ளி செல்லாதே.
நினைவே,
நெஞ்சை நசுக்கி கொள்ளாதே.
விழிகள் எல்லாம்,
உலியாய் மாறி,
சிற்பம் செய்ய துடிக்கிறதே.
பாவம் நெஞ்சம்,
கொஞ்சம் என்று,
கெஞ்ச தானே மறுக்கிறதே...
திங்கள், 9 நவம்பர், 2009
வாழ்க்கை!!!
வாழ்க்கை ஒரு கடலடா ,
நீந்தினால் கரைதொடு,
மூழ்கினால் முத்தெடு.
நீ முடிவெடு,
நீந்துவதா...? அல்லது
மூழ்குவாதா...? என்றல்ல,
முத்துடன் கரை ஏறுவதென்று...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)