செவ்வாய், 29 ஜூன், 2010

நதியின் கண்ணீர் துளிகள்!!!

மலையில் பிறந்து,
தரையில் தவழ்ந்து,
ஆற்று படுகையை - அன்றாடம்
அழகுற நனைத்து

பூமியின் வெடிப்பிற்கு
புத்துயிர் தந்து
கிளைகளாய் பிரிந்து - நீர்
நிலைகளை உருவாக்கி

கரையோர வேர்களை,
வாடவிடாமல், காத்திருக்கும்
கொக்கின் பசி - தீர்த்து
பயனளித் ததை

எப்படிச் சொல்வேன்
என்னை துளிதுளியாய்
கலங் கடிக்கும் - சாய
பட்டறை களிடம்.

உழைப்பவன் பிழைப்பு

அரை வயிற்றுக்காக
ஆறு கல் தூரம்
வண்டி இழுத்தான்
உழைப்பாளி.

அவன் இழுத்ததில்
நன்றாக சுழன்றது,
வண்டி சக்கரம் மட்டுமே,
அவன்
வாழ்க்கை சக்கரம் அல்ல.

கால்பந்து

ஒற்றை பந்தை
உதைத்தோடி,
எதிர்க்கும் வீரனை
தடுத்தாடி,
மின்னல் வேகத்தில்,
அணியின்
இன்னல் தீர்க்க,
வலையில் சேர்த்தால்,
நாடே போற்றும்
கால்பந்து வீரனை.
நாம் எப்போது போற்றுவோம்?
நம் நாட்டு வீரனை.

ஞாயிறு, 20 ஜூன், 2010

வியப்பு!!!

நித்தமும் யாரென?
நினைவுகள் சொல்லிட,
சிந்தையில் ஆடிடும்,
சித்திரம் நீயடி.!!!

வித்தகன் நெஞ்சினில்,
விளைந்ததை சொல்லிட,
குற்றமும் நேர்ந்தது,
விந்தைகள் தானடி!!!

வியாழன், 3 ஜூன், 2010

குறி!!!

இமையை எரித்தாலும்,
இலக்கினை குறிவை,
வெற்றியை வேட்டையாட!!!