செவ்வாய், 29 ஜூன், 2010

நதியின் கண்ணீர் துளிகள்!!!

மலையில் பிறந்து,
தரையில் தவழ்ந்து,
ஆற்று படுகையை - அன்றாடம்
அழகுற நனைத்து

பூமியின் வெடிப்பிற்கு
புத்துயிர் தந்து
கிளைகளாய் பிரிந்து - நீர்
நிலைகளை உருவாக்கி

கரையோர வேர்களை,
வாடவிடாமல், காத்திருக்கும்
கொக்கின் பசி - தீர்த்து
பயனளித் ததை

எப்படிச் சொல்வேன்
என்னை துளிதுளியாய்
கலங் கடிக்கும் - சாய
பட்டறை களிடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக