திங்கள், 20 செப்டம்பர், 2010

அம்மா

உயிரும், மெய்யும்,
இவை இரண்டும்,
சேர வருமொன்ரும்,
ஒன்றாக உச்சரித்தால்
ஒலிக்கும் ரீங்காரம்!!!
மண்ணில் பிறந்தவர்கெல்லாம்,
இதுவே தேவாரம்!!!

இயற்கை முரண்!!!

மேகத்தின்,
கண்ணீர் அஞ்சலி,
வறண்ட பூமிக்கு,
வாழ்வளிக்கும்
பன்னீர் அஞ்சலி!!!

கால்தடம்...

கால்தடம் தேடி,
கடற்கரை நோக்கி,
ஓர் பயணம்.

என் சுவடுகள் தெரிந்தது,
அதை சேரும் முன்னே,
அலைகடல் அழித்தது!!!

கரை முடிந்தாலும்,
என் பயணம் தொடரும்,
கடலில் கரைந்துவிட்ட,
என் காலடி தடம் தேடி!!!

கல்லூரி!!!

புங்கை மரத்து
புன்னகை நிழலில்,
பூத்து குலுங்கும் - பூவின்
வாசம் நுகர்ந்து, பின் அமர்ந்து

இன்னலை மறந்து, இன்னிசை பாடி,
இனியவை பேசி, இயன்றதை கற்ற
கல்லூரி வளாகம், இளமான்களின்
ஆண்டில், இனியவை நான்கு!!!