ஞாயிறு, 24 ஜூன், 2012

குழந்தை தொழிலாளர்...

அன்னமிட்டோரை அம்மா
என்றழைக்கும் உதடுகள்.
கரும்பலகை பிடிக்காமல்
கல்லுடைக்கும் கைகள்

பாடசாலை புறப்பட்டு
பட்டறையில் முடிவுற்ற கால்கள்...
எண்ணற்ற இன்னல்கள்,
இடைவிடாத மின்னலாய்
இடிஇடித்து பெய்கிறது
இவர் வாழ்வில்...

சமூக அவலத்தை
எதுகை மோனையில்
ஏற்புர எழுதும்
நான் என்ன செய்தேன்?

முதல்வரி முதல்
முற்றுபுள்ளி வரை
இடைவிடாமல் படித்த
நீ என்ன செய்தாய்?

சிந்தித்து பார்
இந்தியனே,
சிறகில்லா பறவைகள்
சிகரம் சென்றடைய...

களவு!!!

இனி
நானும் கற்பேன்
களவு,
உன் நெஞ்சை
களவாட!!!

செவ்வாய், 19 ஜூன், 2012

நம்பிக்கை!!!

கைகளில் முடமில்லை,
கால்களில் பழுதில்லை,
கண்களில் இருளில்லை,
செவிகளும் செவிடில்லை,
ஊநில்லா உடலினில்,
குறையாகிப் போனது
முடமான மனம்தானோ?
யாரறிவார்?
இனிமுடிவுறா முயற்சிகள்,
நற்திசையில் முடியட்டும்,
திடமான மனம்கொண்டு!!!

சனி, 16 ஜூன், 2012

Recharge Yourself!!!

ஏமாற்றம் கண்டவன்,
எந்த நிமிடமும் 
கடந்து போவான்...
வெற்றியை கண்டவன்,
ஓர் நிமிடம்
உறைந்து போவான்...
பல கனவுகள்
கானல் நீராய்,
கரைந்த போதும்,
தொடர்ந்து நடைபோடு,
சிலிர்க்க வைக்கும்
சில வெற்றிகளுக்காக!!!