வெள்ளி, 20 ஜூலை, 2012

இறைவா!!!

கல்லை பிரித்தான்,
மண்ணை பிரித்தான்,
கார்முகில் தந்த
நதியை பிரித்தான்...
வீட்டை பிரித்தான்,
நாட்டை பிரித்தான்,
இறந்தால் புதைக்க
இடமும் பிரித்தான்...
பிரித்தே வாழ்ந்தவன்,
பிரித்திட ஏதுமின்றி,
உன்னையும் பிரித்தான்,
என் இறைவா!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக