புதன், 22 மே, 2013

கனவு!!!

நிழல் தரும் மரமெல்லாம்
நிஜம் என்று ஆகட்டும்!
நீர் தரும் நதியெல்லாம்
கரைபுரண்டு ஓடட்டும்!
பசியென்னும் பிணிபோக்கும்
உழவெல்லாம் தழைக்கட்டும்!
விதியெனும் மதியெல்லாம்
ஒளிபெற்று தெளியட்டும்!
என்தேசம், என் மக்கள்,
நிறைவுடன் வாழட்டும்!!!

செவ்வாய், 21 மே, 2013

காகிதம்!!!


இது என் சாபமோ???
என் அன்னையை,
வெட்டி வீழ்த்த,
என்மேல் 
நெடுஞ்சாலை துறையின் 
கையொப்பம்...

திங்கள், 20 மே, 2013

வான்மழை!!!

குடை மீது காதல் கொண்டு,
மழை மேகம் கொட்டி செல்லும்,
நனைந்தாலும் குடை ஏனோ,
மண்மீது விட்டு செல்லும்!!!

வெள்ளி, 17 மே, 2013

உறக்கம்!!!

இமை ரெண்டும் ஊடல் கொண்டு,
ஓயாமல் முட்டிக்கொள்ளும்...
இரவானால் காதல் கொண்டு
மஞ்சத்தில் ஒட்டிக்கொள்ளும்...