ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பாரதிரவாழ்...

தினம் நான்மணி குரல்மேவிடும்,
குன்றாடிடும் கொடியோன் - உடன் 
எழுக்காலையில் கடன்யாவையும் 
கதிராண்டவன் கரம்நீட்டு முன்செய்வாய்...

நீர்பூசிடு  நிலை நெற்றியில்,
துதிபாடிடு நுனிநாவினில் - எழு 
பிறப்பிலும் எனை ஆண்டவன்
உடன்வர தினம் துதிப்பாய்...

குடலிரண்டும் பசியாறிட குரல்
வளையினில் ஸ்வரமாடிட - எடு 
வாளினை துயர் ஆற்றிட 
அழிப்பாய்,அகல் விளக்காய்...

திசையெட்டிலும் விதிமாற்றிடு,
அறம் யாவிலும் வினையாற்றிடு - நல் 
விதிசெய்திடும் விதை யாகிடு,
வாழ்வாய், பார் அதிர வாழ்வாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக