தினம் நான்மணி குரல்மேவிடும்,
குன்றாடிடும் கொடியோன் - உடன்
எழுக்காலையில் கடன்யாவையும்
கதிராண்டவன் கரம்நீட்டு முன்செய்வாய்...
நீர்பூசிடு நிலை நெற்றியில்,
துதிபாடிடு நுனிநாவினில் - எழு
பிறப்பிலும் எனை ஆண்டவன்
உடன்வர தினம் துதிப்பாய்...
குடலிரண்டும் பசியாறிட குரல்
வளையினில் ஸ்வரமாடிட - எடு
வாளினை துயர் ஆற்றிட
அழிப்பாய்,அகல் விளக்காய்...
திசையெட்டிலும் விதிமாற்றிடு,
அறம் யாவிலும் வினையாற்றிடு - நல்
விதிசெய்திடும் விதை யாகிடு,
வாழ்வாய், பார் அதிர வாழ்வாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக