வெள்ளி, 28 ஜனவரி, 2011

குடியரசு!!!


ஆண்டுகள் பலவாகியும்
ஏற்றம் கண்டது,
தேசியக்கொடியும்,
அதை ஏற்றுபவனும்.

கூடிநின்று கைதட்டும்
மக்கள் அண்ணார்ந்து
பார்கின்றனர் இன்னும்
ஆகாயத்தையே.

ஏற்றம் இறைப்பவன்
பிள்ளையும்,
விண்ணை தொடும்
ஏற்றம் காணுமா?

நிலாச்சோறு சாப்பிடும்
பிள்ளையும்,
நிலவை தொடுமா?

இயலாதவனுக்கும்,
இல்லாதவனுக்கும்,
இயன்றதை செய்திட
பூக்கட்டும் நல்லரசு.

அன்று முதலே,
அனைவருக்கும்
இனிய
குடியரசு!!!

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

நிழல்...

சிரிக்கையில், சிரிக்கிறாய்
நடக்கையில், நடக்கிறாய்.
எக்காலமும் மனமறியாது,
உடனிருக் கிறாய்.
தனிமை போக்கி,
துணிவை தர,
எதிர்வந்து நின்றிடு,
நீ
என் நிழலல்ல,
நிஜம் என்று
உணர்த்திட...

திங்கள், 10 ஜனவரி, 2011

எங்கே இறைவன்...?

குருடனுக்கும் இருள் தெரியும்,
செவிடனுக்கும் நிசப்தம் கேட்கும்,
ஊமை உதடுகளும் மௌனம் பேசும்.

இவைகளில் ஏதும் அறியாமல்
யாதுமாகி நிற்கிறாய்
என் இறைவா....

தெளிவு

எழுத துடிக்கும் கரங்கள்,
அதை தடுக்கும் தெளிவில்லா,
கற்பனை வளங்கள்.
மனக்கேனியில் ஊற்றெடுக்க,
சிறிது சிந்திய, சிதறிய தமிழை,
எழுதிப்பார்த்தேன் குறைகளோடு.
கவிதை களத்தில், நிறைகளை
ஓர்நாள் அறுவடை செய்ய!!!