ஏற்றம் கண்டது,
தேசியக்கொடியும்,
அதை ஏற்றுபவனும்.
கூடிநின்று கைதட்டும்
மக்கள் அண்ணார்ந்து
பார்கின்றனர் இன்னும்
ஆகாயத்தையே.
ஏற்றம் இறைப்பவன்
பிள்ளையும்,
விண்ணை தொடும்
ஏற்றம் காணுமா?
நிலாச்சோறு சாப்பிடும்
பிள்ளையும்,
நிலவை தொடுமா?
இயலாதவனுக்கும்,
இல்லாதவனுக்கும்,
இயன்றதை செய்திட
பூக்கட்டும் நல்லரசு.
அன்று முதலே,
அனைவருக்கும்
இனிய
குடியரசு!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக