மூச்சறுந்து மடியும் பச்சிளங்கன்று,
இல்லையென வாதிடுவார் மூடர் நின்று...
மாநிலத்தேர்ச்சி பெறும் பெண்மை ஒன்று,
மருத்துவம் இல்லையென்பார் திருடர் நின்று...
உழவெங்கள் தொழில் என்பார்இன்று,
அவர் குறைகேட்கமாட்டார் செவிடாய் நின்று...
பசுக்களை தெய்வம் என்பார் இன்று,
காசுக்காக கொல்வார் தொழில் தர்மம் என்று...
ஏழ்மை எங்கும் இல்லையென்பார் இன்று,
ஏழைகளை கொல்லும் விஷமாய் நின்று...
வளர்ச்சி வளர்ச்சி என்றுரைப்பார் இன்று,
தினம் புதிய புதிய வரியாய் நின்று...
கருப்பு பணம் ஒழிப்போம் என்பார் இன்று,
களவாணி கூட்டமோடு ஒன்றாய் நின்று...
நாளொருவண்ணம் பிறந்ததென்பார் நின்று,
அறுவை சிகிச்சையில் புதிய இந்தியா இன்று...
வலிபொறுக்காமல் துடிக்கிறாள் தாயவள்..
பாலின்றி சாகிறாள் சேயவள்...
போதுமடா இந்த புதிய சிகிச்சை...
போதுமடா மீண்டும் புதிய பிறப்பு...