வீதியில் இறங்குவார்,
வேடிக்கை பார்ப்பார்,
கூச்சல் இடுவார்,
கும்மாளம் அடிப்பார்...
கைஅசைப்பார், புன்னகைப்பார்,
பார்கேட்க பகுத்தறிவை,
பறைசாற்றுவார்...
பாமரனின் நண்பனென,
நன்நடிப்பார்...
போருக்கு அழைத்திடுவார்,
புறப்பட்டு வாயென்பார்,
சமத்துவம் தானென்பார்,
சதிசெய்து சாகடிப்பார்...
வீதியில் உழைத்திடுவார்,
குடிசையில் கைநனைப்பார்,
கும்பிட்டு கைகுடுப்பார்,
குற்றம் பலசெய்திடுவார்...
பேருக்கொரு ஆணை இடுவார்,
நாற்திசையில் சிலைவைப்பார்,
பூட்டிட்டு காத்திடுவார், பின்சிலையுடைத்து
போர்போரென உணர்வெடுப்பார்...
பொதுச்சொத்தை நாசம் செய்வார்,
பொல்லாங்கு இதுவென மோசம்செய்வார்,
பொய்ப்புரட்டில் நால்வர்ணம் பூசிடுவார்.
வெற்றி வெற்றி என ஆர்பரிப்பார்..
வென்றது சனநாயகமென கொக்கரிப்பார்...
கேட்பதும் கிடைக்காது,
சொல்வதும் விளங்காது,
அறிவித்த போராட்டம்,
அரைநாளில் முடிவுறும்.
வெளிச்சம் விழும்முன்,
விட்டிலாய் ஓட்டமெடுப்பார்...
இவர்களல்லவா போராளிகள்!!!
இதுவல்லவா போராட்டம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக