விழிமூடி தூங்கியே,.
விடையாவும் தேடட்டும்...
புரிகின்ற வேலையில்,
இமைரெண்டும் விரியட்டும்...
உணர்கின்ற வேலையில்,
உள்ளங்கள் உறையட்டும்...
வழிந்தோடும் கண்ணீரில்,
வன்மங்கள் கரையட்டும்...
மனிதத்தின் மாண்புகள்,
மனதிலே வளரட்டும்...
பிழையான தருணங்கள்,
மண்ணிலே புதையட்டும்...
மனிதனை மாற்றியே,
மானுடம் சிறக்கட்டும்...
மனசாட்சி இவ்வண்ணம்,
உலகினை மாற்றட்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக