செங்கற் சூளை போல,
பலநாளா வயிறு காயும்...
சேவக்கூவும் நேரம் எங்க,
கண்ணு மெல்ல சாயும்...
ஆண்ட வீட்டில் அடிமைப்பட்டு,
கேப்பக்களி தான் மிச்சம்...
அத கருப்பச்சாமி கேட்டுபுட்டா,
முதுகுல வயிறு முட்டும்...
சங்கு கழுத்துல கத்திப்பார்த்தேன்,
சாமிகாது கேக்கலடா....
பூமியில் பொறந்த போறப்ப எண்ணி,
சாவும் இப்ப வெலகுதுடா...
செம்மண் சாந்து பூசி,
பட்டகாயம் மெல்ல ஆறும்...
செந்நெல் சோறு பொங்க,
கேப்பச்சட்டியும் கெஞ்சும்...
கொட்டிலில் அடைச்ச காளை கூட,
கோவப்பட்டா சீறும்...
கூனிக்குறுகி வாழுங்கூட்டம்,
எப்பநெஞ்ச நிமிரும்...
வீழ்ந்தாகூட வீரந்தாண்டா,
தோளுல துண்ட ஏத்துங்கடா...
முதுகுல சுமந்த மூட்டைய எறக்கி,
தலையில எழுத்த மாத்துங்கடா....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக