திங்கள், 5 ஆகஸ்ட், 2013

சிவம் !!!

நீரின்றி பயிரெல்லாம் காய்கின்ற போது,
கங்கைதர சடையவிழ்த்து ஈசனாய் வா வா...
துன்பத்தில் துயரத்தில் அழைக்கின்ற போது,
ஏழைக்கண்ணீரை துடைத்துவிட ருத்ரனாய் வா வா...
சர்வத்தில் சகுனிகளின் ஆட்டத்தை வீழ்த்த,
மூவுலகம் காக்கின்ற முக்கண்ணா வா வா...
அசுரர்கள் அழிக்கின்ற இனமொன்றை காக்க,
புதுவில்லேந்தி போர்புரிய புலியாக வா வா...
இருபாலர் உலகுக்கு சமமென்று காட்ட,
ஒருபாதி உமையாகி அர்த்தனாய் வா வா...
சவமாகி இடுகாட்டில் எரிகின்ற போது,
என்சாம்பலள்ளி பூசிக்கொள்ள சங்கரா வா வா...
அகிலத்தின் மாயையில் அகப்பட்ட என்னை,
அரணாகி ஆட்கொள்ள சிவமாகி வா வா...
அழைக்கின்றேன் வா வா!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக