செவ்வாய், 29 அக்டோபர், 2013

சோகம்!

sorry girls... I shouldn't have written this...
ஒரு வார்த்த, அவபேச,
என் கனவும் கலைஞ்சி போச்சி...
என் மனசில், முன்ன இருந்த,
ஒருவானவில் வெளுத்து போச்சு...
ஏண்டிநீயும், முன்னால வந்த?
எதுக்குஎன்ன, கொண்டாடி கவுத்த???
மனசுக்குள்ள, பூகம்பம் வெடிக்க,
கையவிட்டு, கண்சிமிட்டி போறாடா....

அவனெனப்பு, இப்ப வெறுப்பு,
நாந்தண்ணியில மெதக்குறேன் மீனா???
கண்ணமூடி, கண்டகனவு,
பெருமழையில செத்துப்போன மானா???
அம்மியில அரளிய அரைச்சா...
மயக்கத்துக்கு, மருந்துனு கொடுத்தா...
விழுங்கியதும் கழுத்தையும் நெரிச்சா...
கல்லறையில் என்னதள்ளி பொதச்சாடா...

திங்கள், 28 அக்டோபர், 2013

உரையாடல்...

'அ'னைத்து வார்த்தையும் 
'ஆ'சைப்பட்டு எழுதினேன்...

'இ'வை போதாதென,
'ஈ'கையுடன் எழுதென்றாய்,
'உ'ரக்கச் சொல்லி,
'ஊ'க்கம் தந்து...

'எ'வ்வாறு என 
'ஏ'க்கத்துடன் கேட்டேன்,
'ஐ'யம் கொண்டு...?

'ஒ'ழுக்கமுடன் எழுதென,
'ஓ'ங்காரமாய் சொன்னாய்,
'ஔ'வைத் தமிழ்கொண்டு...

திங்கள், 21 அக்டோபர், 2013

அனாதை...

ஆணின் பெண்ணின் இச்சை,
கொஞ்சம், எச்சம், ஆகிபோனதா...?
எச்சமிங்கு உயிரும் பெற்று,
குப்பை, மேட்டில், வீழ்ந்ததா...? 
ஆக்கும் கடவுள் அறியாபிழையில்,
பூத்த, பூவும், நீயடா... 
அகிலம் யாவும் உன்னைபோலே,
வாழ்ந்து காட்ட யாரடா...?
அஞ்சி அஞ்சி வாழும்,
நெஞ்சிற்கு, எந்நாளும்,
அஞ்சாமை அழகு...
விட்டு ஓடும் துன்பம், 
பின்னாளில், இந்நாளில்,    
கல்லாமை விலகு... 

சொந்தபந்த படைகள் சூழ,
பூமி, வந்த, மானிடா...
சொந்தம்போல காத்து நிற்பது,
கையும், காலும், தானடா...
கண்ணில்வந்த நீரின் காரனம், 
கண்ணின், இமைகள், நீந்தவா...?
விடியல் வரும் நாளைஎண்ணி,
துணிந்து, நீயும், வாழ்ந்துவா...
எட்டி எட்டி பார்க்கும்,
இன்பங்கள், துன்பங்கள்,
பொய்யான நினைப்பு...
குற்றம் குறை கூறும்,
சுற்றத்தை, எந்நாளும்,
நீ தீயில் கொளுத்து... 

அவள்...

யார் நீ யாரடி...?
செந்தீ நீ தானடி...
யார் நீ யாரடி...?
பூமேனி தானடி...
Polish செய்த Granite போல 
உன் கண்கள் மின்ன...
ஒரு பார்வை பார்க்க எந்தன் 
நெஞ்சம் ஏதேதோ பண்ண...
எனை சத்தமின்றி, சலவை செய்யாதே...
இதழ் எச்சில் நீரில், தீயை மூட்டாதே...!!!

வியாழன், 17 அக்டோபர், 2013

மயக்கம்...

ஆலமர நிழலுல, கோலிகுண்டு ஆடயில,
அந்தியில கூவுங்குயில், ஒசையொன்னு கேக்கயில,
அக்கரையில் பொன்னுஒண்ணு, தண்ணிகொண்டு போகும்போது,
இக்கரையில் பாத்தஎன்ன, அலைவந்து தாக்குதடி...
அவயாரோ??? அவயாரோ???    
அவபாக்க, குளிர் தீயோ???
சாயங்காலம் கண்ணடிச்ச, சூரியன சாச்சவளோ???
சாஞ்சிபுட்ட சூரியன, கண்ணுக்குள்ள வெச்சவளோ??? 
கத்திபார்வை என்னகொல்ல, கண்சிமிட்டி பாப்பவளோ?
ஆசைப்பட்டு நானும்பேச, காணாதேசம் போனவளோ???

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

தேடல்...

விடியும் விடியும் என்று 
விடியல் தேடி வந்த 
இளைய மனது ஒன்று 
உடைகிறதே...
உடைந்து வடிந்து வரும் 
உயிரின் உதிர சத்தம்,
செவிகள் கேட்க நெஞ்சம்,
பதர்கிறதே...
விழுது விழுதுவென,
விழுந்து காத்து விட,
கிளைகள் முகங்களில் வேர்,
எழுகிறதே...
அழுது அழுது கண்கள்,
முகமும் சிவந்து விட,
வடிந்த புணலில் அனல்,
பறக்கிறதே...
முடியும் முடியும் என்று,
முயன்று பார்க்க மனம்,
இழந்த தேடல் தனை,
தொடங்கியதே...