'அ'னைத்து வார்த்தையும்
'ஆ'சைப்பட்டு எழுதினேன்...
'இ'வை போதாதென,
'ஈ'கையுடன் எழுதென்றாய்,
'உ'ரக்கச் சொல்லி,
'ஊ'க்கம் தந்து...
'எ'வ்வாறு என
'ஏ'க்கத்துடன் கேட்டேன்,
'ஐ'யம் கொண்டு...?
'ஒ'ழுக்கமுடன் எழுதென,
'ஓ'ங்காரமாய் சொன்னாய்,
'ஔ'வைத் தமிழ்கொண்டு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக