வியாழன், 17 அக்டோபர், 2013

மயக்கம்...

ஆலமர நிழலுல, கோலிகுண்டு ஆடயில,
அந்தியில கூவுங்குயில், ஒசையொன்னு கேக்கயில,
அக்கரையில் பொன்னுஒண்ணு, தண்ணிகொண்டு போகும்போது,
இக்கரையில் பாத்தஎன்ன, அலைவந்து தாக்குதடி...
அவயாரோ??? அவயாரோ???    
அவபாக்க, குளிர் தீயோ???
சாயங்காலம் கண்ணடிச்ச, சூரியன சாச்சவளோ???
சாஞ்சிபுட்ட சூரியன, கண்ணுக்குள்ள வெச்சவளோ??? 
கத்திபார்வை என்னகொல்ல, கண்சிமிட்டி பாப்பவளோ?
ஆசைப்பட்டு நானும்பேச, காணாதேசம் போனவளோ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக