ஞாயிறு, 13 அக்டோபர், 2013

தேடல்...

விடியும் விடியும் என்று 
விடியல் தேடி வந்த 
இளைய மனது ஒன்று 
உடைகிறதே...
உடைந்து வடிந்து வரும் 
உயிரின் உதிர சத்தம்,
செவிகள் கேட்க நெஞ்சம்,
பதர்கிறதே...
விழுது விழுதுவென,
விழுந்து காத்து விட,
கிளைகள் முகங்களில் வேர்,
எழுகிறதே...
அழுது அழுது கண்கள்,
முகமும் சிவந்து விட,
வடிந்த புணலில் அனல்,
பறக்கிறதே...
முடியும் முடியும் என்று,
முயன்று பார்க்க மனம்,
இழந்த தேடல் தனை,
தொடங்கியதே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக