ஆணின் பெண்ணின் இச்சை,
கொஞ்சம், எச்சம், ஆகிபோனதா...?
எச்சமிங்கு உயிரும் பெற்று,
குப்பை, மேட்டில், வீழ்ந்ததா...?
ஆக்கும் கடவுள் அறியாபிழையில்,
பூத்த, பூவும், நீயடா...
அகிலம் யாவும் உன்னைபோலே,
வாழ்ந்து காட்ட யாரடா...?
அஞ்சி அஞ்சி வாழும்,
நெஞ்சிற்கு, எந்நாளும்,
அஞ்சாமை அழகு...
விட்டு ஓடும் துன்பம்,
பின்னாளில், இந்நாளில்,
கல்லாமை விலகு...
சொந்தபந்த படைகள் சூழ,
பூமி, வந்த, மானிடா...
சொந்தம்போல காத்து நிற்பது,
கையும், காலும், தானடா...
கண்ணில்வந்த நீரின் காரனம்,
கண்ணின், இமைகள், நீந்தவா...?
விடியல் வரும் நாளைஎண்ணி,
துணிந்து, நீயும், வாழ்ந்துவா...
எட்டி எட்டி பார்க்கும்,
இன்பங்கள், துன்பங்கள்,
பொய்யான நினைப்பு...
குற்றம் குறை கூறும்,
சுற்றத்தை, எந்நாளும்,
நீ தீயில் கொளுத்து...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக