பகலவன் சாயும் பொழுது,
பறக்கையில் அசையா சிறகு,
வரையாத வெற்றிட காகிதம்,
தீட்டாத வானவில் வர்ணம்,
மங்கையின் நாவிதழ் நடனம்.
சொற்களின் இடையே மௌனம்,
நீள்கின்ற தலையணை முணுகல்,
சட்டென்று உடையும் மொழிகள்.
வளையாது செல்லா நதிகள்,
உப்பாகும் சேர்கின்ற கடல்கள்,
வான்மீது மிதக்கும் முகில்கள்,
வயல்மீது தெளிக்கும் துளிகள்.
வானத்தை தொடுகின்ற அரண்கள்,
அதனுள்ளே ஊற்றெடுக்கும் குமிழிகள்.
பறவைகள், பட்சிகள், விலங்குகள்,
பிடித்து கதைவடைத்த மனிதர்கள்.
திமில் பிடித்த கைகளில்,
திரை நீக்கி காண்கிறேன்,
இவையாவிலும் நீயே அழகு...
நிலமங்கை அழகு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக