செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

அம்மா... பிள்ளை....

அம்மா...
கருவில் வளரும் காதல் கீற்று,
மனதை மயக்குதே...
மயங்கும் மனது உறங்கிடாது,
மழலை  ரசிக்குதே....
விரைந்து வளர்ந்து உலவ வா வா...
மடியின் மீது தவழ வா வா...
கண்முன்னே... சில விண்மீனே...
கண்மூடி நான் தூங்க கைசேருமோ???

பிள்ளை...
என் உருவம்  உதிரம் உனதுநிழலே ,
நானும் தோன்றினேன்...
உன் இதயம் எழுப்பும்  இசையை கேட்டு,
நாளும் தூங்கினேன்...
வெளி உலகம் காண ஏக்கமில்லை...
சிலகாலம் தானே கருவின் எல்லை...
கண்முன்னே, என் விண்மீனே...
கண்மூடி நீ தூங்கு கைசேருவோம்...

அம்மா...
மானும் மயிலும் ஓடும் ஆடும்,
மாலை நேரமே....
மயங்கிடாது குயிலும் கூவும்
மாரிஜாலமே....
கிளிகள் பேசும் இரவில் கொஞ்சம்...
கேட்கும் நூறு இசைகள் நெஞ்சம்...
கண்முன்னே... சில விண்மீனே...
கண்மூடி நான் தூங்க கைசேரவா....

பிள்ளை....
மானின் ஓட்டம் மயிலின் ஆட்டம்,
நானும் காண்கிறேன்...
மயங்கிடாது குயிலின் இசையை,
ரசித்து கேட்கிறேன்...
உனது பேச்சு கிளியை மிஞ்சும்...
உனது சுவாசம் வசந்தம் என்றும்...
கண்முன்னே... நீ விண்மீனே...
கண்மூடி நீ தூங்க தாலாட்டுவேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக