ஞாயிறு, 23 ஜூன், 2013

தலையணை!!!

உனக்காக நான் வடித்த,
கண்ணீர் துளிகளை,
எனக்காக ஏற்று  கொண்டது,
என் தலையணை,
ஏதுமறியாத இரவின் மடியில்!!!

வெள்ளி, 21 ஜூன், 2013

வெட்கம் :-)

நீ வெட்கப்பட்டு 
சிரிக்கையில், 
திறையாகி, 
முகம் மறைத்த,
கூந்தலை 
பிடிக்கவில்லை,
அக்கணம்...:-)

வெட்கம்!!!

எத்தனை முறைநான்,
சிரித்திருப்பேன்,
ஆனந்தத்தில், ஆச்சர்யத்தில்...???
அனைத்தும் மறந்தது 
எனக்கு...
ஒருமுறை வெட்கத்தில் 
மலர்ந்த சிறு புன்னகையில்,
என் அக்காமகள், 
எனை பெயர்சொல்லி
அழைத்தபோது!!!

வியப்பு!!!

மழையென்று,
நனையாமல்,
மரத்தடியில்.
நீயும் நின்றாய்...
பிழையென்று,
விடைசொல்ல,
காற்றாகி 
கிளை அசைத்தாள்...
உனை முழுதும்
நனைத்திட!!!

செவ்வாய், 11 ஜூன், 2013

விதவை

சகுனத்தின் பெயர்சொல்லி,
மதிகெட்டோர் சாடிடுவார்...
சமயத்தின் பெயர்சொல்லி,
சங்கடங்கள் செய்திடுவார்...
சடங்குகளை உடைத்தெறிந்து,
சத்தியத்தில் நீ நின்றால்,
மரபுகளை உடைத்துவிட்டு
மாற்றத்தை நீ காண்பாய்,
குங்கும கறையில்லா
நிலா முகம் கொண்டவளே!!!

வெள்ளி, 7 ஜூன், 2013

கடிதம்!!!

மறந்துவிட்டாயா என்னை...???
உன் எண்ணங்களை ஏந்தி
சென்றவன் நான்...
அவள் படித்தாள்,
மனம் திகைத்தாள்,
நீ காதலன் ஆனாய்,
நான் பொக்கிஷம் ஆனேன்!!!

மறந்துவிட்டாயா என்னை...???
உன் எண்ணங்களை ஏந்தி
சென்றவன் நான்...
அவள் படித்தாள்,
மனம் துடித்தாள்,
நீ கவிஞன் ஆனாய்,
நான் கிழிந்து குப்பையானேன்!!!

காதலனையும்,
கவிஞனனையும்,
தீர்மானிப்பவன் நான்...
ஒருவன் அல்லல் படுவான்,
ஒருவன் அல்லல் படுத்துவான்
இனி மறக்காதே என்னை... :) :) :)

பரிசு!!!

தங்கையின்,
துளிர் கைகள்
தரும் முதல் பரிசு,
அண்ணனின்,
கன்னத்தில் விழும் 
முதல் அறை, 
அவை அக்கறை!!!

வியாழன், 6 ஜூன், 2013

உதவி!!!

திறமையும், வறுமையும்
நல்ல நண்பர்கள்!
திறமை வெளிப்பட,
வறுமை உதவிடும்!!!

சிந்தனை!!!

ஆயிரம் ஆண்டுகள் 
நிமிர்ந்து நிற்கும் 
கோபுரத்தை கண்டு 
வெட்கி தலை குனிந்தது,
ஓராயிரம் முறை
மழையில் அறுந்துபோன,
சாலைகள்,
சீர் செய்தவனை எண்ணி...