வெள்ளி, 7 ஜூன், 2013

கடிதம்!!!

மறந்துவிட்டாயா என்னை...???
உன் எண்ணங்களை ஏந்தி
சென்றவன் நான்...
அவள் படித்தாள்,
மனம் திகைத்தாள்,
நீ காதலன் ஆனாய்,
நான் பொக்கிஷம் ஆனேன்!!!

மறந்துவிட்டாயா என்னை...???
உன் எண்ணங்களை ஏந்தி
சென்றவன் நான்...
அவள் படித்தாள்,
மனம் துடித்தாள்,
நீ கவிஞன் ஆனாய்,
நான் கிழிந்து குப்பையானேன்!!!

காதலனையும்,
கவிஞனனையும்,
தீர்மானிப்பவன் நான்...
ஒருவன் அல்லல் படுவான்,
ஒருவன் அல்லல் படுத்துவான்
இனி மறக்காதே என்னை... :) :) :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக