செவ்வாய், 11 ஜூன், 2013

விதவை

சகுனத்தின் பெயர்சொல்லி,
மதிகெட்டோர் சாடிடுவார்...
சமயத்தின் பெயர்சொல்லி,
சங்கடங்கள் செய்திடுவார்...
சடங்குகளை உடைத்தெறிந்து,
சத்தியத்தில் நீ நின்றால்,
மரபுகளை உடைத்துவிட்டு
மாற்றத்தை நீ காண்பாய்,
குங்கும கறையில்லா
நிலா முகம் கொண்டவளே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக