ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

தந்தை...

நீ சிரித்தாய் 
நான் சிரித்தேன்...
நீ முறைத்தாய்,
நானும் முறைத்தேன்...
உன்னையே நான்,
பிரதிபலிப்பேன்...
ஏனெனில் உன் 
பிம்பம் நான்...

புதன், 17 செப்டம்பர், 2014

புதுயுகம்!!!

எளியோர் தமை 
வசை பாடிடும் 
இகழ் நாவினை 
அறுப்போம்...

மனம் வாடிட,
முதியோர்களை 
விடுப்பார் தமை 
வெறுப்போம்...

பகைப்போர் எவர்?
எதிர்ப்போர் எவர்?
தலை மாண்டிட,
அடிப்போம்...

வறியோர் பிணி,
பசி ஆறிட,
வரும் நாளினில்,
உழைப்போம்....

பெரியோறவர் 
புகழ் பாடிடும் 
புது யுகம் 
வென்றெடுப்போம்...

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

தமிழ்மகன் அழுகை...

அம்மா, என் அம்மா...
என் ஆணவம், நீயம்மா...
என் நாவினில் உதிர்ந்திடும்
சொல்வளமின்று, சோர்ந்து போனதம்மா...
என் சொற்களை கேட்டிடும்,
காதுகள்ஏனோ, செவிடாய் போனதம்மா...
ஐவிரல் எழுதிய ஏடுகள்,
வெற்று கூடுகள் ஆனதம்மா...
ஏய்த்திடும் உதடுகள் வாசிப்பின்றி,
வஞ்சனை செய்யுதம்மா...
என் அழுகையை துடைத்திடும்,
ஆறுதல் மொழிகள் இங்கே இல்லையம்மா...
இனிவாழும் காலம் கேட்பாரின்றி,
தமிழ் மெல்லச் சாகுமம்மா....

திங்கள், 15 செப்டம்பர், 2014

யதார்த்தம்...

கற்பனை கதவினை,
தமிழ் தாழிட்டு,
கவிதையை பூட்டிவைப்பான்,
நற்கவிஞன்...
தாழினை உடைத்தெறிந்து,
கவிதையை சிறைமீட்பான்,
நல்வாசகன்...
நான், கவிஞனுமில்லை...
நீ, வாசகனுமில்லை...

புதன், 10 செப்டம்பர், 2014

வழிகள்...

கனவுகள் சுமந்திடு,
கனக்கையில் விழித்திடு,
இயன்றிடும் நாள்வரை,
இழந்திட மறுத்திடு...

இடர்களை கலைத்திடு,
இடுக்கனில் நகைத்திடு,
வளர்ந்திடும் நாள்வரை,
இகழ்களை பொறுத்திடு...

வலிகளை செதுக்கிடு,
வழிகளை பெருக்கிடு,
வாழ்ந்திடும் நாள்வரை,
முயற்ச்சிகள் தொடர்ந்திடு...

பகைமையை விடுத்திடு,
நல்வினை எடுத்திடு,
அகிலமே அரண்டிட,
வெற்றிக்கனை தொடுத்திடு...

சனி, 6 செப்டம்பர், 2014

தேவதை...

அடடா... 
புயல் பூர்த்ததே,
அவள் பார்த்திட,
இந்த மனதில்...

மெழுகாய்,
மனம் உருகுதே,
பின், உறையுதே,
இவள் சிரிப்பில்...

புதிதாய், 
இவன் தேடலும், 
மெல்ல தொடங்குதே,
இரு விழியில்...

அழகாய்,
ஒரு வானிலை,
தந்து போகிறாள்,
இவன் வழியில்....

யாரோ யாரோ????
இந்த தேவதை யாரோ???

தேடல்...

கவிஞனின்
தேடல்,
வெள்ளைத்தாளில்  
ஒளிந்திருக்கும்,
வரிகள்...