கனவுகள் சுமந்திடு,
கனக்கையில் விழித்திடு,
இயன்றிடும் நாள்வரை,
இழந்திட மறுத்திடு...
இடர்களை கலைத்திடு,
இடுக்கனில் நகைத்திடு,
வளர்ந்திடும் நாள்வரை,
இகழ்களை பொறுத்திடு...
வலிகளை செதுக்கிடு,
வழிகளை பெருக்கிடு,
வாழ்ந்திடும் நாள்வரை,
முயற்ச்சிகள் தொடர்ந்திடு...
பகைமையை விடுத்திடு,
நல்வினை எடுத்திடு,
அகிலமே அரண்டிட,
வெற்றிக்கனை தொடுத்திடு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக