புதன், 17 செப்டம்பர், 2014

புதுயுகம்!!!

எளியோர் தமை 
வசை பாடிடும் 
இகழ் நாவினை 
அறுப்போம்...

மனம் வாடிட,
முதியோர்களை 
விடுப்பார் தமை 
வெறுப்போம்...

பகைப்போர் எவர்?
எதிர்ப்போர் எவர்?
தலை மாண்டிட,
அடிப்போம்...

வறியோர் பிணி,
பசி ஆறிட,
வரும் நாளினில்,
உழைப்போம்....

பெரியோறவர் 
புகழ் பாடிடும் 
புது யுகம் 
வென்றெடுப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக