செவ்வாய், 16 செப்டம்பர், 2014

தமிழ்மகன் அழுகை...

அம்மா, என் அம்மா...
என் ஆணவம், நீயம்மா...
என் நாவினில் உதிர்ந்திடும்
சொல்வளமின்று, சோர்ந்து போனதம்மா...
என் சொற்களை கேட்டிடும்,
காதுகள்ஏனோ, செவிடாய் போனதம்மா...
ஐவிரல் எழுதிய ஏடுகள்,
வெற்று கூடுகள் ஆனதம்மா...
ஏய்த்திடும் உதடுகள் வாசிப்பின்றி,
வஞ்சனை செய்யுதம்மா...
என் அழுகையை துடைத்திடும்,
ஆறுதல் மொழிகள் இங்கே இல்லையம்மா...
இனிவாழும் காலம் கேட்பாரின்றி,
தமிழ் மெல்லச் சாகுமம்மா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக