திங்கள், 21 செப்டம்பர், 2009

தமிழ்...!!!

தமிழ்...!!!
பாரதியின் ஏட்டில் இடம் பெறத்தவறிய,
ஒருசில தமிழ் சொற்கள் என் சிந்தனையில் குடியேற துவாங்கியிருக்கும்
காலம் இது...
தமிழ் என்னுள் வாழ்வதை,
தமிழ் மண்ணை எட்ட நின்று,
ரசிக்கும் தருணத்தில் உணர்ந்தேன்...
கருவுற்ற என் கருத்துகளை அடை காத்து, 
படைப்புகளை உருவாக்க முயற்சிக்கும் காலம் இது...
உனக்கேன் இந்த கர்வம் என்று இதை வாசிப்பவர்கள் நினைக்கலாம்,
தமிழின் குரலை ஒலிக்க செய்ய என் நாவிதழ்,
துடிப்பதால் இந்த கர்வம்... 
சங்கம் வளர்த்த, மதுரை பெண்ணின், மனதில் குடியேற,
தமிழின் இனிமையை தூது விட துணிந்துவிட்டேன்,
வெற்றி தோல்வியை எண்ணி கவலை கொள்ளாமல்,
காரணம்,
என் எழுத்துகள் பாரதியின் ஏட்டில் இருந்து எடுத்தவை அல்ல...
என் மனதை துளைத்து வெளியேறியவை......
என் எழுத்துகள் ஏட்டில் இடம்பெற, 
கவிதை புத்தகம் வெளியிட தேவையில்லை,
அறிவியல் தொழில் நுட்பத்தின் அலைவரிசையில்,
தொட்டிலில் விடுகிறேன்...
உறங்க செய்ய அல்ல,
அதன் குரலை கேட்பவரை
விழிக்க செய்ய...
விழித்து கொள்வாயா...?
என்னை வாழவைக்க...
இல்லை விடை பெற்று செல்வாயா..?
என்னை தவிக்க வைக்க...

தமிழ் குழந்தையின்,
மழலைச்சொல் மிகவும் இனிமையானது,
சிரித்தால்...
இனிமையாக இருக்கும்,
அழுதாலும்,
அழகாகத்தான் இருக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக