திங்கள், 21 செப்டம்பர், 2009

படைப்பு...

என் முதல் படைப்பின், கடைசி தருணத்தில்,
ஒரு சிறு நெருடல்,
என் சிந்தனை பிறரை சென்றடையுமா என்று...?

அப்பொழுது,
செங்கதிரின் மின்னொலியில்,
பூங்காற்று என் புத்தகத்தை புரட்டி போட்டது...
என் இமையோரம், ஒரு துளி நீர்...
கருத்துகள் காற்றில் கலந்ததற்காக அல்ல...
அக் காற்றை அனைவரும் சுவாசிக்க போகிறார்கள் என்ற
மகிழ்ச்சி வெள்ளத்தில்,
இனிமையாக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக