புதன், 23 செப்டம்பர், 2009

வஞ்சப் புகழ்ச்சி...!!!

கருவிழி மேல் மை ஜொலிக்க,
பூங்கையில் வளை ஒலிக்க,
பொன் விரலால் கோலம் இட,
காலை கதிரவன்,
கண் சிமிட்டினான்,
அவள் அழகை கண்டு .
நானோ,
நொடிப்பொழுதும் இமையாமல்
பார்த்து ரசிப்பேன்.
அவள் அழகை அல்ல,
கண் சிமிட்டும் கதிரவனை...!!!

2 கருத்துகள்: