செவ்வாய், 11 டிசம்பர், 2012

மாற்று திறனாளி!!!

திறமைகள் கொட்டிக்கிடக்க,
உரிமைகள் விட்டுப்பறக்க,
உறவுகள் எட்டிச்சிரிக்க,
வறுமையோ கட்டியணைக்க,
கருவாகி, உருவாகி,
மெல்ல எருவாகும், 
மனிதர்க்கு மத்தியில்,
சாதிப்பான் ஓர் 
மாற்று திறனாளி!!!

பாரதி!!!

நாளைமீது நம்பிக்கை 
வைத்த நாயகன். 
நம் நாளை எண்ணி, 
நாளும் கழித்த பேரறிவாளன்...
சமுதாய சீர்கேடுகளை,
அறம் பாடி அழித்தவன்...
நல்லவர் வீழ்ந்தாலும்,
அவர் எண்ணங்கள்
வீழ்வதில்லை,
மண்ணோடு மறைந்துவிட்டான்,
இம்மண்ணில் பிறப்பவர்,
இனி புதுவிதி செய்ய!!!
"பார் அதிர" பாட்டிசைத்தான்...
பிற்காலத்தில் பல
"பாரதிகள்" உருவெடுக்க...
இனி நாம் உருவெடுப்போம்,
"கலியுக பாரதிகளாய்"

செவ்வாய், 20 நவம்பர், 2012

சிந்தனை

சிந்திக்க நினைக்காத 
சிந்தையுள்ள மனிதனே
சமுதாய சிதைவிற்கு 
காரணம்...
இனியாவது சிந்திப்போம் 
சிந்தையுடன்...

செவ்வாய், 16 அக்டோபர், 2012

போராட்டம் !!!

முடியும் வரை,
போராடு,
ஆம், எடுத்த காரியம்
முடியும் வரை,
போராடு!!!

வியாழன், 11 அக்டோபர், 2012

உரிமைப்போர்!!!


உரிமைகள் விட்டு
போனது எங்கே?
உடைமைகள் விட்டு
போனது எங்கே?
அகதிகள் நாமும்
அதிதிகள்  ஆவோம்,
தடுப்பவர் தலைகளை
தகர்த்திட துணிவோம்,
சுதந்திர தாகம்
சிந்தையில் ஏற்போம்,
தடைகளை உடைத்து
படைகளை சேர்ப்போம்,
அசுரனை அழிக்க
ஆயுதம் செய்வோம்,
புழுக்கள் நினைத்தால்
புலியாய் மாறும்,
புலிகள் நினைத்தால்
பூமியே மாறும்!!!
இரவுகள் இன்று
விடியலாய் மாறும்,
விடிந்திட மறுத்தால்
இடிகளாய் இடிப்போம்,
இடிகளாய் இடிப்போம்!!!

விலைவாசி...

நாளிதழில்,
நாளும் இதழ்கள்
வாசிப்பது,
விலை வாசி...
காரணம்...? 
மனிதன் சுகவாசி...!!!

புதன், 10 அக்டோபர், 2012

மனிதன்!!!

சாதிக்க பிறந்தவனே
மனிதன்...
இதை மறவாதிரு,
இனி மனிதனாயிரு...

உறக்கம்!!!

நிலவுகள் தாலாட்ட,
இரவுகள் குளிரூட்ட,
விழிகளில் உருவானது 
மயக்கம்!!!
மனதினில் ஒளிவீச,
கனவுகள் கதைபேச,
மௌனமாய் மலர்ந்ததென் 
உறக்கம்!!!

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

தனித்தமிழ் ஈழம்...

அலைகடல் அரணில் 
திசைகளை வகுத்து
வாணிபம் செய்தேன்.
சிங்களன் அழும்குரல்
கேட்டு ஆறுதல்சொல்ல
அவனிடம் ஓடினேன்!

குயிலும் குருவியும்,
நாயும் நரியும்
நன்றாய் வாழுது இங்கே!!!
முதலில் தோன்றிய,
தலைமகன் உறவுகள்
விட்டுபோனது எங்கே??

அம்மையும் அப்பனும்,
மனைவியும் மக்களும்,
மண்ணில் புதைந்தனர்.
இதை நித்தமும் பார்த்த
கடவுளும், அரசனும்
மௌனமாய் இருந்தனர் :(

மதி இழ மாட்டோம்,
இனி விழ மாட்டோம்,
எனும் எதிர்குரல் கேட்டு,
புத்துயிர் பெறுவோம்,
புதுவிதி செய்வோம்,
இனி நம்மில், 
நம் மண்ணில்!!!

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

நண்பன்!!!

என் அன்னைக்கும் தெரியும்,
என் தந்தைக்கும் தெரியும்,
என் மனைவிக்கும் தெரியும்,
என் மகளுக்கும் தெரியும்,
இவர்களே என் இதயம் என்று...
அனால் எனக்கு
மட்டுமே தெரியும்?
என் இதயத்தை
என்றும் இளமையாய்
இயக்கி கொண்டிருப்பது
உன் நட்பென்று!!!

வெள்ளி, 20 ஜூலை, 2012

பரிசு!!!

என்னை வெற்றிபெறச்
செய்தவுன் வாளுக்கு
நான்தந்த பரிசு - என்
மேனித் தழும்புகள்..

பயம்!!!

தோல்வி பயம்துரத்திக் கொள்ளும்,
வெற்றியோ விலகிச் செல்லும் 
இவை முயல்பவன் முடியாதென்று
எண்ணும் வரையில்...
வெற்றி காண வேண்டியது 
வெளியில் அல்ல? உன்னில்... 
இனி பயமும் பயந்தோட,
மௌனமாய் எண்ணத்தை மாற்றிடு,
வெற்றிமாலைகள் நாளை கையில்...

இனியவளே!!!

நீ இரவில் ஒளிரும் குளிர் நிலா...
உன் நிழலில் போவேன் தினம் உலா... 
என் உறக்கம் கலைக்கும் ஒரே கனா?
உன் நெஞ்சை கேட்கும் காதல் வினா...
முதல்முறை நெஞ்சில் கலவரம்,
முடிவினில் காதல் வெளிவரும்,
முகவுரை தந்து எழுதிடு 
நம்காதல் இனி தொடர்கதையாக!!!

இறைவா!!!

கல்லை பிரித்தான்,
மண்ணை பிரித்தான்,
கார்முகில் தந்த
நதியை பிரித்தான்...
வீட்டை பிரித்தான்,
நாட்டை பிரித்தான்,
இறந்தால் புதைக்க
இடமும் பிரித்தான்...
பிரித்தே வாழ்ந்தவன்,
பிரித்திட ஏதுமின்றி,
உன்னையும் பிரித்தான்,
என் இறைவா!!!


ஞாயிறு, 24 ஜூன், 2012

குழந்தை தொழிலாளர்...

அன்னமிட்டோரை அம்மா
என்றழைக்கும் உதடுகள்.
கரும்பலகை பிடிக்காமல்
கல்லுடைக்கும் கைகள்

பாடசாலை புறப்பட்டு
பட்டறையில் முடிவுற்ற கால்கள்...
எண்ணற்ற இன்னல்கள்,
இடைவிடாத மின்னலாய்
இடிஇடித்து பெய்கிறது
இவர் வாழ்வில்...

சமூக அவலத்தை
எதுகை மோனையில்
ஏற்புர எழுதும்
நான் என்ன செய்தேன்?

முதல்வரி முதல்
முற்றுபுள்ளி வரை
இடைவிடாமல் படித்த
நீ என்ன செய்தாய்?

சிந்தித்து பார்
இந்தியனே,
சிறகில்லா பறவைகள்
சிகரம் சென்றடைய...

களவு!!!

இனி
நானும் கற்பேன்
களவு,
உன் நெஞ்சை
களவாட!!!

செவ்வாய், 19 ஜூன், 2012

நம்பிக்கை!!!

கைகளில் முடமில்லை,
கால்களில் பழுதில்லை,
கண்களில் இருளில்லை,
செவிகளும் செவிடில்லை,
ஊநில்லா உடலினில்,
குறையாகிப் போனது
முடமான மனம்தானோ?
யாரறிவார்?
இனிமுடிவுறா முயற்சிகள்,
நற்திசையில் முடியட்டும்,
திடமான மனம்கொண்டு!!!

சனி, 16 ஜூன், 2012

Recharge Yourself!!!

ஏமாற்றம் கண்டவன்,
எந்த நிமிடமும் 
கடந்து போவான்...
வெற்றியை கண்டவன்,
ஓர் நிமிடம்
உறைந்து போவான்...
பல கனவுகள்
கானல் நீராய்,
கரைந்த போதும்,
தொடர்ந்து நடைபோடு,
சிலிர்க்க வைக்கும்
சில வெற்றிகளுக்காக!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

மரணம்!!!

எரியும் விறகிலே,
எரிந்து போகுமே,
சிலையான மேனி!
உயிர் பிரிந்து போகையில்,
எழுந்து நிற்குமே,
இரையான தீனி!

மெய்இன்று தீயினில்,
பொய்யாகி போனதே!
உயிர்மட்டும் பிரிந்தின்று,
புகையாகி போனதே!

இதுதீயில் எரியும்
தேகம், இது தெரியும்
முன்புவரும் காலம்
மீது தாகம்!

இது கண்ணீரில் எரிகின்ற,
அணையாத வேள்வி!
உயிர் போனதெங்கே?, நாம்
கேட்கும் கேள்வி.

விடைகண்டு சொல்பவர்,
உயிருடன் உள்ளாரோ?
விடைகான செல்பவர்,
உயிரினை மாய்ப்பாரோ?

இது மரணம் தரும் பாடம்,
உயிர் மறைந்த பின்பும் பாரம்,
தீயில் எரிந்துபோன பின்பும்,
காற்றாய், தீயாய், ஒளியாய்,
வாழ்வோமே!!!